கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும் முறையில் திடீர் மாற்றம் ஏன்? - அதிகாரிகளிடம் ஆட்சியர் கேள்வி

4 months ago 17

தூத்துக்குடி: கூட்டுறவு சங்கங்களில் ஏற்கெனவே கடன் வழங்கும் முறையில் திடீரென மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பது ஏன் என்று தூத்துக்குடியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது ஆட்சியர் இளம்பகவத் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்.

Read Entire Article