திருநெல்வேலி: கூடங்குளம் அருகே இளைஞரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில், 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூத்தங்குழி கிராமத்தில் 2007 நவம்பர் மாதம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, அப்பகுதியை சேர்ந்த ஜேசு அருளப்பன் மகன் ரீகன்(22), கணேசன் ஆகிய இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது.