கூடங்குளத்தில் ஸ்குரூ டிரைவரால் வாலிபரை குத்திய 3 பேர் கைது

2 months ago 10

நெல்லை,நவ.21: கூடங்குளத்தில் வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டதோடு ஸ்குரூ டிரைவரால் குத்திய முதியவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள இடிந்தகரை மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் டால்டன் (31). அதே ஊரைச்சேர்ந்த சைலஸ்(36) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று டால்டன் இடிந்தகரை மேலத்தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்குவந்த சைலஸ், நேரின்ஸ்(28), ராயப்பன் (62) ஆகியோர் அவரை வழிமறித்து தகராறு செய்து ஸ்குரூ டிரைவரால் குத்தினர். இதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து டால்டன் கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் போலீசார், டால்டனை தாக்கி ஸ்குரூடிரைவால் குத்திய சைலஸ், நேரின்ஸ், ராயப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

The post கூடங்குளத்தில் ஸ்குரூ டிரைவரால் வாலிபரை குத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article