குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

1 day ago 4

தூத்துக்குடி,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும், ரோகினி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. உடனடியாக குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து முதலில் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய ரோகிணி 6 ஹெச் 200 சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, அந்த ராக்கெட் 75.24 கி.மீ உயரத்தை எட்டி 121.42 கி.மீ தூரம் சென்று கடலில் விழுந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு கையகப்படுத்தப்பட்டுள்ள 2,233 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தை சுற்றி கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், ராக்கெட் ஏவுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மணல் திட்டுகள் அகற்றப்பட்டு, மணல்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு தரைத்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இது தவிர உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டுமான வசதிகளும் துரிதமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இங்கிருந்து சிறிய ரக ராக்கெட் ஏவும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 

Read Entire Article