‘‘குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம்’’ - காவலர் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுறுத்தல்

3 months ago 18

சென்னை : காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் இருந்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறைக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 இரண்டாம் நிலை காவலர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 20 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மீதமுள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளும், அந்தந்த மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகளும் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

Read Entire Article