குரோம்பேட்டை சுரங்கப் பாதையை டிசம்பருக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு கெடு

2 months ago 12

சென்னை: தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரைச்சாலை பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்படும் பாலத்தை மே மாதத்துக்குள்ளும் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், பெருநகர அலகின் மூலம் ரூ.50 கோடி மதிப்புக்கு மேல் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் குறித்து எ.வ.வேலு இன்று (நவ.22) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் பேசியது: “சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சாலை மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள், கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாயினை கடப்பதற்குத் தேவையான பாலங்கள், ரயில்வே கடவு பாலங்கள் தேவைப்படுகின்றன.

Read Entire Article