குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து!

5 hours ago 3

நீலகிரி – குன்னூர் பகுதியில் இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சதப்பாறை தண்டவாளத்தில் விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாறையை அகற்றி சீரமைக்கும் வரை மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது.

இந்த ரயிலில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் பாறை உருண்டு விழுந்தால் தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

The post குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து! appeared first on Dinakaran.

Read Entire Article