குன்னம் அரசு பள்ளியில் ரூ.38 லட்சம் மதிப்பில் கலையரங்கம் திறப்பு

6 hours ago 1

 

ஸ்ரீபெரும்புதூர், பிப்.23: குன்னம் அரசு பள்ளியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறக்கப்பட்டது.  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குன்னம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் சார்பில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கலையரங்கம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், குன்னம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் இலக்கியா பார்த்திபன் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தனியார் நிறுவனத்தின நிர்வாக இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், குன்னம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post குன்னம் அரசு பள்ளியில் ரூ.38 லட்சம் மதிப்பில் கலையரங்கம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article