தேவையானவை:
குதிரை வாலி – 1கப்
முளைகட்டிய பயறு – கால் கப்
பச்சைமிளகாய் – 4
இஞ்சி – சிறிது
பெருங்காயம்- கால் தேக்கரண்டி
கொத்துமல்லி நறுக்கியது – கால் கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
குதிரைவாலியை 2 மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் முளைப்பயறு, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம், கொத்துமல்லி சேர்த்து தோசைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெக்கவும்.
The post குதிரைவாலி அடை appeared first on Dinakaran.