குண்டும், குழியுமாக காணப்படும் சாலை

4 months ago 17

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி மாவட்டம், பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி இருசன்கொட்டாய் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட இப்பகுதி மக்கள், தங்களது விளைபொருட்களை நல்லம்பள்ளி, தர்மபுரி சந்தைக்கு எடுத்துச் செல்ல அண்ணா நகர் கிராமம் வழியாக செல்ல வேண்டும். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சாலை, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த வழியாக அதிகாலை நேரங்களில் விளைபொருட்களை எடுத்து செல்லும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் சாலையில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குண்டும், குழியுமாக காணப்படும் சாலை appeared first on Dinakaran.

Read Entire Article