குட்கா பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு

4 months ago 12

 

கரூர், ஜன. 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம், கரூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடிவேல் நகர் மற்றும் திருக்காம்புலியூர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 500 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

The post குட்கா பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article