ஓசூர், ஜன.18: ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று பேடரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர் குட்கா வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலாஞ்சல் பகேரா (35) என்பதும், ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் தங்கி கூலிவேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த ேபாலீசார், அவரை கைது செய்தனர்.
The post குட்கா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.