
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் AAY/PHH குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 9 லட்சத்து 27 ஆயிரத்து 955 பேர் உள்ள நிலையில் இதுவரை 7 லட்சத்து 94 ஆயிரத்து 44 குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே கை ரேகை பதிவு (eKYC) செய்துள்ளார்கள். இன்னும் 1 லட்சத்து 33 ஆயிரத்து 547 குடும்ப அட்டைதாரர்கள் கை ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். அரசின் சலுகைகளை தொடர்ந்து பெற தங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெளியூரில்/வெளி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்துவரும் நபர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் தாங்கள் இருக்கும் ஊரில்/மாவட்டத்திலுள்ள ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய (eKYC) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்சொன்ன பணி விரைவில் முடிவுற இருப்பதால் AAY/PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருடன் அருகில் உள்ள ரேசன் கடைகளுக்குச் சென்று விரல் ரேகை/கண் விழி பதிவு (ஐரிஸ்) செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.