குடியிருப்புகள் வழியாக உடல்களை எடுத்து செல்ல தடை கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

2 months ago 8

இறந்தவர்களின் உடல்களை குடியிருப்புகள் வழியாக எடுத்துச் செல்லாமல், பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லக் கோரிய மனுவை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விருதுநகர் மாவட்டம் பனையாடிபட்டி கிராமம் கம்மவார் சமூக நலச் சங்கச் செயலர் மகாலட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊரில் யாராவது இறந்தால் குடியிருப்பு வழியாக சடலங்களை எடுத்துச் செல்கின்றனர். இதனால் குடியிருப்புதாரர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. சடலங்களை பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லலாம். எனவே, சடலங்களை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது குடியிருப்பு தெருக்களை பயன்படுத்தாமல், பிரதான சாலை அல்லது வழக்கமான பாதையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Read Entire Article