அரூர், ஜன.19: மொரப்பூர்-கம்பைநல்லூர் சாலையில் அண்ணாமலைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக, ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், பஞ்சாயத்து குடிநீரும் விநியோகிக்கப்படவில்லை. தண்ணீர் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று மொரப்பூர்- கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து கம்பைநல்லூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post குடிநீர் கேட்டு சாலை மறியல் appeared first on Dinakaran.