குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் உயிரிழப்பு? - அரசியல் தலைவர்கள் கண்டனம்

2 hours ago 2

திருச்சி: ​திருச்சி உறையூரில் குடிநீரில் கழி​வுநீர் கலந்​த​தால் சிறுமி உட்பட 3 பேர் அடுத்​தடுத்து உயி​ரிழந்​த​தாகக் கூறப்​படும் சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். உறையூர் பணிக்​கன் தெரு, மின்​னப்​பன் தெரு பகு​தி​யில் வாந்​தி, வயிற்​றுப் போக்கு காரண​மாக பிரி​யங்​கா(4) என்ற சிறுமி மற்​றும் 2 பெண்​கள் என 3 பேர் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தனர்.

மேலும், 17 பேர் அரசு மருத்​து​வ​மனை​யிலும், 10-க்​கும் மேற்​பட்​டோர் தனி​யார் மருத்​து​வ​மனை​களி​லும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். குடிநீரில் கழி​வுநீர் கலந்​ததே இதற்​குக் காரணம் என்று குற்​றம்​சாட்​டி, அப்​பகுதி மக்​கள் நேற்று முன்​தினம் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

Read Entire Article