குடல் புற்றுநோயால் விபரீத முடிவு ஒரே கயிற்றில் தூக்கு மாட்டி கணவன், மனைவி தற்கொலை

1 day ago 5

சென்னை: குடல் புற்றுநோயால் கணவன் தற்கொலை செய்ததையடுத்து, அவரை பிரிய மனம் இல்லாத மனைவியும் அதே கயிறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்னர். திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (59). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவருக்கு இந்திரா (51) என்ற மனைவியும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மேலும் செல்வராஜ் தனது 2 மகள்களுக்கும் திருமணம் முடித்துள்ளார்.

மகன் சாம்ராஜ், மருமகள் புனிதா ஆகியோருடன் தம்பதி வசித்து வந்தனர்.இந்நிலையில் செல்வராஜ் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தார். இதனால் மன வேதனை அடைந்த செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவியிடம் புலம்பியதாக கூறப்படுகிறது. அவர் புலம்பியதைப் பார்த்து பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், நீங்கள் இல்லாத உலகில் நான் மட்டும் எதற்கு என கணவர் செல்வராஜிடம் இந்திராவும் வேதனையுடன் தெரிவித்ததாக தெரிகிறது.இதனை தொடர்ந்து செல்வராஜ், மனைவி இந்திரா ஆகிய இருவரும் தற்கொலை செய்த முடிவு செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு மகன் மற்றும் மருமகள் இருவரும் உறவினர்கள் வீட்டிற்குச் சென்றிந்தனர். அப்போது ஒரே கயிற்றில் தூக்கிட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். வீடு திரும்பிய மகன், மருமகள் இருவரும் தம்பதியர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post குடல் புற்றுநோயால் விபரீத முடிவு ஒரே கயிற்றில் தூக்கு மாட்டி கணவன், மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article