கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி டிவிட்

4 months ago 11

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

 

The post கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி டிவிட் appeared first on Dinakaran.

Read Entire Article