
சென்னை,
கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காத நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
"கீழடியில் கிடைத்திருப்பது தமிழர்தம் பெருமை மட்டுமல்ல. மானுடத்தின் பெருமை. தோண்டுவதில் கிடைக்கும் பொன்னிலும் மண் இருக்கலாம். ஆனால், அதை அரசியலாக்குவோர் மண்டைகளிலும் இருப்பதுதான் சிக்கல்.
பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அரும்பொருள்கள் இன்று நம் கைகளுக்குக் கிடைத்திருக்கின்றன என்றால் இன்னும் எத்தனை ஆயிரமாண்டுகள் ஆனாலும் அவை வெளிவந்தே தீரும் என்பது இயற்கையின் நியதி.
கிடைத்ததைக் கொண்டாடி, அடுத்த தலைமுறைக்கும் நாகரிகத்தைக் கடத்துவதே நம் கடமை என்பதை 'அரசியல் பிழைப்போர்' உணரவேண்டும். கீழடி தமிழர்களின் தொன்மையை தடுப்போர் எவராயினும் வரலாற்றில் தோண்டுவாரின்றி புதையுண்டு போவார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.