கிரேன் மோதி பெண் பலி

2 months ago 13

சேலம், டிச.19: சேலம் கொண்டலாம்பட்டி என்.மேட்டூரைச்சேர்ந்தவர் கவிதா(38). இவர் கடந்த 11ம்தேதி கொண்டலாம்பட்டி பைபாஸ் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த கவிதாவை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிரேன் மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Read Entire Article