கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

3 months ago 10

கிருஷ்ணராயபுரம், டிச.3: கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வழங்கி மகிழ்ந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 1987-88 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் 36 வருடங்களுக்கு பிறகு சந்தித்து ஒரு நாள் விழாவாக கொண்டாடினர். மேலும் தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை அழைத்து கௌரவித்து ஆசி பெற்றனர். விழாவில் முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்ந்தனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் வந்திருந்து கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு தேவையான மேஜை நாற்காலிகள் வழங்கினர்.

The post கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article