
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்ேகாட்டை அருகே அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஜேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதலைமுத்து (வயது 65), விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலையில் அவர் வீட்டில் இருந்து 7 மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்காக அருகில் உள்ள ஏழு சுத்துக்கோட்டை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். ஆனால் அவர் மாலையில் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் உறவினர்கள் தேடி சென்றனர்.
அப்போது ஒரு மாடு மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. மற்ற 6 மாடுகள் திரும்பி வரவில்லை. மேலும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற விவசாயி மதலைமுத்து இரவு வரை வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் தேடியும் அவர் என்ன ஆனார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நேற்று காலை ஏழு சுத்துக்கோட்டை வனப்பகுதிக்குள் சென்று தேடி பார்த்தனர். அப்போது அங்கு காட்டு யானை தாக்கி கால் துண்டாகி உடல் சிதைந்த நிலையில் மதலைமுத்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.