கிருஷ்ணகிரி: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 4,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் பாதுகாப்பை கருதி, நீர்வரத்து முழுவதும் மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தினேஷ் குமார் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையாலும், கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று (20ம் தேதி) காலை 8 மணிக்கு, விநாடிக்கு 3,208 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணியளவில் 4,500 கனஅடியாக அதிகரித்தது.