கிரிவல பாதையில் சாமியார்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

3 hours ago 2


திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை மேற்கு போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கிரிவலப் பாதையில் சந்தேகத்துக்கிடமாக சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவரது பையில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்ததும், ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த ராம்(27) என்பதும் தெரியவந்தது.

மேலும், கிரிவல பாதையில் உள்ள சாமியார்களுக்கு விற்பதற்காக கஞ்சா கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கிரிவல பாதையில் சாமியார்களுக்கு கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article