கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய சென்னை இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

3 months ago 11

சென்னை: சென்னையில் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு சம்பவத்தில் பேட்மிட்டன் விளையாடியபோது ஓய்வு பெற்ற ராணுவ கர்னலும் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்திக்(25). சென்னையில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் பணி செய்து வரும் நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, இவர் ஆதரவு தெரிவித்த அணி வெற்றி பெற்றது. இதனால், உற்சாகம் அடைந்த கார்த்திக், போட்டி முடிவடைந்த பின்னர் மைதானத்தை சுற்றி வந்ததோடு மட்டும் அல்லாமல் உற்சாக குரலெழுப்பி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

Read Entire Article