கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன்: டாக்டர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என நீதிமன்றம் கேள்வி

4 months ago 11

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள உயர் சிகிச்சை மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை கடந்த 13ம் தேதி அவரது அறையில் விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து விக்னேஷ் மீது கொலை முயற்சி, பொது ஊழியரை தாக்கியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில், பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விக்னேஷ் தரப்பில், தன் தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக மருத்துவர் செயல்பட்டாதால் ஆத்திரத்தில் குத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பி, தினமும் வேலூர் சத்தூவாச்சாரி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து விக்னேஷ்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன்: டாக்டர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article