திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த அழகப்பன் என்பவரது காளை வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டு ஓடிச் சென்று காளை கலிங்கப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிக்காக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் நிலை அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீருக்குள் போராடிக் கொண்டிருந்த ஜல்லிக்கட்டு காளையை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
The post கிணற்றில் விழுந்த காளை மீட்பு appeared first on Dinakaran.