காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு; ஒன்றிய பாஜ அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

1 week ago 3

சென்னை: காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்திய ஒன்றிய பாஜ அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றிய பாஜ ஆட்சிக்கு வந்த 2014 முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.410ல் இருந்து தற்போது ரூ.820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூ.50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜ அரசு.

மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜ அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு; ஒன்றிய பாஜ அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article