சென்னை: பாதிக்கப்பட்டோருடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேசியுள்ளனர். தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரிகள் இன்று மாலை காஷ்மீர் சென்றவுடன் பணிகளை மேற்கொள்வர். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியானோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் யாரும் இல்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
The post காஷ்மீர் தாக்குதலில் பலியானோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் யாரும் இல்லை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.