காவிரியில் மிதந்த ராக்கெட் லாஞ்சர்: திருச்சி அருகே பரபரப்பு

2 months ago 11

திருச்சி: திருச்சி அருகே காவிரி ஆற்றில் மிதந்த ராக்கெட் லாஞ்சரை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே அந்தநல்லூர் சிவன் கோயில் காவிரி படித்துறையில் நேற்று மக்கள் குளிக்க சென்றனர். அப்போது கரையில் தண்ணீரில் ராக்கெட் லாஞ்சர் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சென்று, தண்ணீரில் கிடந்த சுமார் மூன்று அடி நீளம் உள்ள ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி பாதுகாப்பாக மண்ணில் புதைத்து வைத்தனர்.

மேலும் ராக்கெட் லாஞ்சர் இங்கு எப்படி வந்தது, ஏற்கனவே பயன்படுத்தியதா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். இன்று வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வந்து ராக்கெட் லாஞ்சரை சோதனையிட உள்ளனர். பின்னர் வெட்டவெளியில் வைத்து அதை செயலிழக்க செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஜீயபுரம் பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி ஒரு ராக்கெட் லாஞ்சர் எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ராக்கெட் லாஞ்சர் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காவிரியில் மிதந்த ராக்கெட் லாஞ்சர்: திருச்சி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article