காவிரியில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை: ஒன்றிய அமைச்சர் பதில்

3 months ago 7

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் , காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் ஒப்புதல் வழங்கியுள்ளதா? என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, காவிரியில் கீழ் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க நதிநீர் தகராறுகள் சட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் காவிரி நீர் சேமிப்பு,நீர் பகிர்வு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. மேலும் தற்போது வரையில் காவிரி ஆற்றில் புதிய அணையை கட்டுவதற்கு ஒன்றிய அரசு எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

The post காவிரியில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை: ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article