காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 17ல் கூடுகிறது

1 month ago 10


புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 36வது கூட்டம் வரும் 17ம் தேதி அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. அன்றைய தின கூட்டத்தின்போது ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீர் பங்கீடு மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் நீர் வளத்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

The post காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 17ல் கூடுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article