காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று கரையை கடக்கிறது: 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

4 months ago 28

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே இன்று அதிகாலை கரையைகடக்கக்கூடும். இதன் காரணமாக, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்ததாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ.தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கி.மீ.தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் இன்று (அக்.17) கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்றுவட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Read Entire Article