நாடு கடத்திய இந்தியர்களின் காலில் சங்கிலியை கட்டியதன்மூலம் இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவமானப்படுத்தி உள்ளார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் டி.ராஜா நேற்று கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. பஞ்சாபில் கட்சியின் தேசிய மாநாடு செப்டம்பர் 21 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.