கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோடு பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

2 months ago 9

ஈரோடு, நவ. 17: ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர்(பெருமாள்) கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டு சென்றனர்.
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாத தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழ் மாதம் கார்த்திகை மாத பிறப்பையொட்டியும், விஷ்ணுபதி புண்யகாலத்தையொட்டியும் ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று கோயில் பிரகாரத்தை 27 முறை வலம் வந்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்தில் வைத்து, மூலவரை வழிபட்டு சென்றனர்.

The post கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோடு பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article