கார்த்திகை கடைசி செவ்வாய் குலசை. கோயிலில் தேரில் அம்மன் வீதியுலா

2 months ago 10

உடன்குடி,டிச.13: கார்த்திகை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது . கார்த்திகை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் காலை 6மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 2மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சைபூஜை நடந்தது. இரவு 9மணிக்கு ராக்கால பூஜையைத் தொடர்ந்து முத்தாரம்மன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. இதில் உடன்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

The post கார்த்திகை கடைசி செவ்வாய் குலசை. கோயிலில் தேரில் அம்மன் வீதியுலா appeared first on Dinakaran.

Read Entire Article