சென்னை : காரல் மார்க்ஸ் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற லட்சியப் பயணத்தில் வென்றிட உறுதி கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய காரல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்! சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதர் மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும்!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post காரல் மார்க்ஸ் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற லட்சியப் பயணத்தில் வென்றிட உறுதி கொள்வோம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.