காரமடை அருகே பைக் மோதி தொழிலாளி பலி

3 days ago 3

 

காரமடை, மே 8: காரமடையை அடுத்துள்ள எத்தப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மஞ்சுநாதன் (24). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த மே.4ம் தேதி பைக்கில் வேலைக்காக புங்கம்பாளையம் சென்றார். பின்னர், மாலை பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (35), என்பவர் ஓட்டி வந்த பைக் மஞ்சுநாதன் ஓட்டி வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நவீன் குமார் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். படுகாயமடைந்த மஞ்சுநாதனை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்துகுறித்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post காரமடை அருகே பைக் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Read Entire Article