விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே மாணிக்கம் தாகூர் எம்பி நேற்று அளித்த பேட்டி: பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர் தான், அவரைப் போல் யாரும் வர முடியாது. இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது. எனவே மிகைப்படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு நடிகர் விஜய் உட்பட யாரையும் பேசுவது என்பது சரியாக இருக்காது.
எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வரும் சமயத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்வார்கள். ஆனால் பாஜவுக்கு மட்டுமே தேர்தலில் தோல்வி அடையும் மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை தான் அவர்களுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
The post காமராஜருடன் விஜய்யை ஒப்பிடுவதா? மாணிக்கம் தாகூர் எம்பி கண்டனம் appeared first on Dinakaran.