காந்தி, நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் 30, 31ம்தேதி பேச்சு போட்டி:  தமிழ் வளர்ச்சி துறை ஏற்பாடு  காஞ்சி கலெக்டர் தகவல்

4 months ago 8

காஞ்சிபுரம், ஜன.19: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 30, 31ம் தேதி தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், அண்ணல் காந்திடியடிகள் பிறந்தநாளையொட்டி வரும் 30ம்தேதி அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி வரும் 31ம்தேதி அன்றும் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சு போட்டிகள் காஞ்சிபுரம், டாக்டர் பிஎஸ்எஸ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முற்பகல் 9 மணிக்கு தொடங்கப்பட உள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தேர்வு செய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ – மாணவியருக்கும், கல்லூரி மாணவ – மாணவியருக்கும் தனித்தனியே கீழ்கண்ட தலைப்புகளில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் அனைத்து தலைப்புகளையும் தயார் செய்து வர வேண்டும், போட்டி நடைபெறும் நாளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் தலைப்பை பற்றி பேச வேண்டும்.

அதன்படி, போட்டி நடைபெறும் நாள்: 30.1.2025 அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்: பள்ளி: 1. காந்தி கண்ட இந்தியா 2. இமயம் முதல் குமரி வரை 3. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள்.
கல்லூரி: 1. வேற்றுமையில் ஒற்றுமை 2. சத்திய சோதனை 3. உப்புசத்தியாகிரகத்தில் காந்தியடிகள் 4. வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள்.
அதன்படி, போட்டி நடைபெறும் நாள்: 31.1.2025 ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்:
பள்ளி: 1. சுதந்திர போராட்டத்தில் நேரு 2. நவீன இந்தியாவின் சிற்பி 3. ரோசாவின் ராசா மற்றும் கல்லூரி: 1. ஆசிய ஜோதி 2. அமைதிப் புறா நேரு 3. நேருவின் பஞ்சசீலக் கொள்கை 4. நேரு கட்டமைத்த இந்தியா.
இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ₹5,000, இரண்டாம் பரிசு ₹3,000, மூன்றாம் பரிசு ₹2,000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளன.
இதேபோன்று, பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ₹5,000, இரண்டாம் பரிசு ₹3,000, மூன்றாம் பரிசு ₹2,000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சு போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக ேதர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ₹2,000 வீதம் வழங்கப்பட உள்ளன. இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காந்தி, நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் 30, 31ம்தேதி பேச்சு போட்டி:  தமிழ் வளர்ச்சி துறை ஏற்பாடு  காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article