காதல் விவகாரம்: ஒருவர் குத்திக்கொலை - கோர்ட்டு ஆயுள் தண்டனை

10 hours ago 2

திருச்சிராப்பள்ளி,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமசிவபுரத்தை சேர்ந்த இறந்துபோன பாரத்திபன் (எ) கணேசன் 48/20, த.பெ பிச்சை என்பவரின் மகன் ஆகாஷ் என்பவர் எதிரி-1 குமார் (எ) முக்காடு குமார் 52/25 த.பெ சுந்தரம், ரோஸ் கார்டன், லால்குடி என்பவரின் மகளை காதலித்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு 09.09.2020-ம் தேதி அன்று எதிரி-1 குமார் (எ) முக்காடு குமார் என்பவர் எதிரி-2 நாகராஜ் (எ) பாம்பு நாகராஜ் 39/25 த.பெ பெரியசாமி, தெற்கு தெரு, லால்குடி ஆகிய இருவரும் லால்குடி, சுண்ணாம்புகார தெரு பகுதியில் பாரத்திபன் (எ) கணேசனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி இறந்து போன பாரத்திபன் (எ) கணேசன் என்பவரின் சகோதரர் மோகன் 52/25 த.பெ பிச்சை கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி எதிரிகள் மீது லால்குடி காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் 26.06.2025 அன்று திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் (ADJ-II) எதிரிகள் 1. குமார் (எ) முக்காடு குமார், எதிரி-2 நாகராஜ் (எ) பாம்பு நாகராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய். 1000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக லால்குடி காவல் நிலைய ஆய்வாளர் அழகர் மற்றும் லால்குடி காவல் நிலைய நீதிமன்ற காவலர் பிரபாகரன் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

Read Entire Article