காதல் திருமணம் செய்த கணவனுக்கு வலை 17 வயது சிறுமி கர்ப்பம்

4 months ago 14

வந்தவாசி, ஜன.10: வந்தவாசியில் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை அதே பகுதியை சேர்ந்த காதர் அலி என்பவர் காதலித்து, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் தற்போது 6 மாதம் கர்ப்பிணியான உள்ள சிறுமி நேற்று செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், 17 வயதில் கர்ப்பிணியாக இருப்பது குறித்து வந்தவாசி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில், காதர் அலி காதல் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள காதர்அலியை வலைவீசி தேடி வருகிறார்.

The post காதல் திருமணம் செய்த கணவனுக்கு வலை 17 வயது சிறுமி கர்ப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article