காதல் தம்பதி தற்கொலை

3 hours ago 2

கோபி: குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளையம் சின்னகரட்டை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (19). இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துகாட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வராஜ் மகன் சக்திவேல் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் புதுக்கொத்துகாட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு அரசூர் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள இருவரும் சின்னகரட்டில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி சின்னகரட்டில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி தற்கொலை செய்து கொள்வதை பார்த்த சக்திவேலுவும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post காதல் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article