கெங்கவல்லி, பிப். 13: ஆத்தூர் அடுத்த சதாசிவபுரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் பிரதீப்(30), பெங்களூருவில் உறவினர் வீட்டில் தங்கி எம்எஸ்சி படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாபு மகள் சிந்து(21), பிபிஏ படித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், 9ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு, ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் மலர்கொடி இருதரப்பின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிந்துவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, சிந்துவை கணவர் பிரதீப்புடன் அனுப்பி வைத்தனர்.
The post காதல் ஜோடி போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.