காதலை எதிர்த்தவர் வெட்டிக்கொலை

4 hours ago 2

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன் (42). திருமணமாகாதவர். இவர் திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் மகள் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரை அதே ஊரைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் அர்ஜூனன் (23) என்பவர் காதலித்துள்ளார்.

இவர்கள் காதலுக்கு வள்ளியப்பன் எதிர்ப்பு தெரிவித்து அர்ஜூனனை மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜூனன், நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு சீனமங்கலம் சாலையில் வள்ளியப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து அர்ஜூனனை கைது செய்தனர்.

The post காதலை எதிர்த்தவர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article