ஜெயங்கொண்டம், ஜன. 17: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து சுவாமி தரிசனம் செய்து புது காலமாக பொழுதை கழித்து சென்றனர். ஜெயங்கொண்டம் பகுதியில் காணும் பொங்கல் விழா அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடினர். பலகிராமங்களில் பெண்கள் ஏரிகரைகளில் கரும்பால் பந்தலிட்டு நடுவில் வெல்லம்கலந்த அரிசி, தேங்காய், பழம் வைத்து நாச்சியார் அம்மனுக்கு பூஜைசெய்து படைத்தனர். மேலும் பெண்கள் கூடி கும்மிஅடித்து பாட்டுபாடி பூஜையிட்ட வெல்லம் கலந்த அரிசியை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். மழைபொழியவேண்டும், எல்லோரும் இன்புற்று வாழ பூமி செழிக்கவேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், அனைவரும் அமைதியுடன் வாழவேண்டும் என பூஜைசெய்தனர். கங்கைகோண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நேற்று வழக்கத்தை விட ஏராளமானவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்துடன் வந்து இருந்து சாமி தரிசனம் செய்து குழந்தைகளுடன் இருந்து கலைச் சிற்பங்களை பார்த்து குழந்தைகளுக்கும் அதனை காட்டி பொழுதை கழித்தனர்.
The post காணும் பொங்கல் விழா கங்கைகொண்ட சோழபுரத்தில் அலை மோதிய பொதுமக்கள் appeared first on Dinakaran.