காணும் பொங்கல் கொண்டாட்டம் சுற்றுலா தலங்களில் மக்கள் வெள்ளம்

4 months ago 16

திருச்சி, ஜன.17: காணும் பொங்கலை முன்னிட்டு திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் மக்கள் குவிந்ததால் முக்கொம்பு, கல்லணை, புளியஞ்சோலை என அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கடந்த ஜன.14ம் தேதியும், மாட்டுப்பொங்கல் ஜன.15ம் தேதியும் தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான முக்கொம்பு ஏப்போதும் நீர்ரோட்டம் நிறைந்து இயற்கை எழில்கொஞ்சும் சூழலில் காணப்படும். மேலும் அங்கு ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்கு ஏற்ற விளையாட்டு சாதனங்கள் மற்றும் பூங்கா அமைந்துள்ளது. இதனாலேயே திருச்சி வாசிகள் மத்தியில் முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு தனி மவுசு உள்ளது.

இதேபோல் திருச்சி புகழை தாங்கி பல ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒரு சக்தியாக உள்ள கல்லணையிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கல்லணையில் நீர்வரத்து குறைந்து குளிப்பதற்கு ஏதுவாகவே உள்ளதால் கல்லணைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் தங்கள் குடும்பங்களோடு குளித்து மகிழ்ந்தனர். ஆழம் குறைவான பகுதிகளில் சிறுவர், சிறுமியர் குதித்து மகிழ்ந்தனர். அதேபோல் கரையோரம் அமைந்திருக்கும் பூங்காக்களுக்கு சென்று பொழுதுபோக்கினர்.

The post காணும் பொங்கல் கொண்டாட்டம் சுற்றுலா தலங்களில் மக்கள் வெள்ளம் appeared first on Dinakaran.

Read Entire Article