‘காணாமல்போன’ கொடிங்கால் வாய்க்காலை போராடி மீட்ட எலமனூர் கிராம விவசாயிகள்!

6 hours ago 3

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரப்படாமல் இருந்தது. மேலும், வாய்க்கால், கரைகள் இருந்ததே தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, காணாமல்போன கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகளை கண்டுபிடித்து தருமாறு அப்பகுதி விவசாயிகள், முதல்வரின் முகவரி துறைக்கு மனு அனுப்பினர்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகள் அளவீடு செய்யப்பட்டது. தற்போது அங்கு தூர் வாரும் பணி நடைபெறுகிறது. கரையே இல்லாமல் இருந்த இந்த வாய்க்காலில் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் கரைகளை அமைக்க முயற்சி செய்து வருகிறது.

Read Entire Article