காஞ்சிபுரத்தில் முதல்வர் திறந்து வைத்த ராஜாஜி மார்க்கெட்: 6 மாதங்களுக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்தது

1 week ago 5

காஞ்சிபுரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த ராஜாஜி மார்க்கெட் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. செயல்பாட்டுக்கு வந்த இரண்டாம் நாளே கடையைவிட்டு வெளியே பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து பல கடை உரிமையாளர்கள் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் கடந்த 1933-ம் ஆண்டு ரயில்வே சாலையில் கட்டப்பட்டது ராஜாஜி சந்தை. மொத்தம் 90 ஆண்டுகள் இந்த சந்தை பயன்பாட்டில் இருந்தது. அதிலிருந்த பல்வேறு கடிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன. இதனால் அந்தக் கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதற்கான பணிகள் 2022-ம் ஆண்டு மே 20-ம் தேதி தொடங்கியது. மொத்தம் ரூ.6 கோடியே 81 லட்சம் மதிப்பில் 242 கடைகள் இந்தச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளன.

Read Entire Article