சென்னை,
சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி கோவை-பனாரஸ்( வண்டி எண்:06187) சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி கோவையில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு 18-ந்தேதி காலை 7.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். கோவை-பனாரஸ் சிறப்பு ரெயில் திருப்பூருக்கு காலை 7.28 மணிக்கு வந்து 7.30 மணிக்கு புறப்படும்.
அதே போல் பனாரஸ்-கோவை(வண்டி எண்:06188) சிறப்பு ரெயில் பனாரசில் இருந்து 22-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு 24-ந்தேதி காலை 9.30 மணிக்கு கோவை வந்தடையும். பனாரஸ்-கோவை சிறப்பு ரெயில் திருப்பூருக்கு காலை 8.05 மணிக்கு வந்து 8.10 மணிக்கு புறப்படும்இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.